பக்கங்கள்

27 ஜூன் 2014

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேர்த்திருவிழா நாளை!

புளியங்கூடல் செருத்தனைப்பதிதனில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிறீ ராஜ மகாமாரி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா நாளை (28.06.2014)சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.13.06.2014-வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பித்து மிகுந்த பக்தி மயத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.நாளை 16ம் நாள் அம்பிகை தேரேறி வந்து மக்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறாள்.நாளை மறுதினம் (29.06.2014)ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் அதை தொடர்ந்து திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.அம்பாள் அருள்வேண்டி பல இடங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்தவண்ணமிருப்பதாக  அறிய முடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.