சாட்டிக் கடலில் மூழ்கி மூதாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.குடும்பத்தினருடன் சாட்டிக் கடலில் குளிக்கச் சென்ற இவர் இன்று மாலை கடலில் மூழ்கி மரணமானார். மானிப்பாய் வீதி, கொட்டடியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் நடராஜா (வயது 84) என்பவரே உயிரிழந்தவராவார். பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்,போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.