பக்கங்கள்

19 ஜூன் 2014

வேலணையில் கம்பத்துடன் மோதிய மாநகரசபை அதிகாரிகள்!

யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் அவர்களின் பிக்கப் வாகனம் வேலணை அராலிச் சந்தியில் இன்று மாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அலுவலக நேரத்தில் சாட்டிக் கடற்கரையில் மது அருந்தி விட்டு நிலை தடுமாறிய போதையில் வாகனத்தை செலுத்தியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. வேலணை அராலிச் சந்தியில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோதியதில் மின்கம்பம் ஐந்தடி தூரம் வரை தூக்கி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் முன்பக்கம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. யுன்.என்.டி.பி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட யாழ்.மாநகர சபை ஆணையாளரின் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. அத்துடன், வேலணை வங்களாவடிச் சந்தியில் பலரின் உயிரைப் பறித்தெடுக்கும் வகையில் மேற்படி வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இவ் வாகனத்தில் யாழ்.மாநரக சபையில் கடமையாற்றும் ஐந்து உத்தியோகத்தர்கள் அதிஉச்ச மதுபோதையில் இருந்துள்ளனர். வாகனச் சாரதி நிலை தடுமாறி வாகனம் விபத்துக்குள்ளானது கூடத் தெரியாத நிலையில் போதையில் நின்றுள்ளார்.இவ்வாறானவர்களை உடனடியாக வேலையில் இருந்து நிறுத்துவதுடன், பல மனித உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஒரு அரச வாகனத்தில், அதுவும் ஐந்து பேரும் அரச பணியாளர்கள், அலுவலக நேரத்தில் இவ்வாறானதொரு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை யாழ்.மாநகர சபையின் நிர்வாகத் திறமையினை எடுத்தக் காட்டுவதாக அமைந்துள்ளது. அத்துடன், வாகனச் சாரதி விபத்து நடந்த இடத்தில் கூடிய மக்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன், இது எங்களது வாகனம், இதை நீங்கள் ஒன்றும் பார்க்த் தேவையில்லை என போதையில் உலறிக் கொண்டிருந்தார். இது இவ்வாறிருக்க வாகனத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஆணையாளரின் பெயர் பலகை வாகனத்தில் வந்த ஒருவரால் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

நன்றி:(செய்தி,படம்)new jaffna 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.