பக்கங்கள்

23 ஜூன் 2014

கனடாவில் ஒன்றிணைந்தனர் தமிழ் முஸ்லீம் மக்கள்!

இலங்கையில் பொது பல சேனாவினால் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து நேற்று ஞாயிறன்று நடாத்தினர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைக்கு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது என இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.