பக்கங்கள்

21 ஜூன் 2014

தொடர்கிறது மிருகபலி!250கடாக்கள் படுகொலை!

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை சுமார் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கடாக்ளும் நூற்றுக்கு மேற்பட்ட சேவல்களும் வேள்வியில் பலியிடப்பட்டன. அதிகாலையில் இடம் பெற்ற பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்வி இடம் பெற்றது. நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப சுகாதார முறைப்படியே கடாக்கள் சேவல்கள் வெட்டப்பட்டன என்றும், பொது மக்கள் வெட்டும் காட்சியைப் பார்வையிடா வண்ணமே பலியிடல் நடைபெற்றது என்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வலி. வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கடாக்களைப் பரிசோதனை செய்து, அவற்றை வெட்ட அனுமதித்தனர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேள்வியில் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.