பக்கங்கள்

02 ஜூன் 2014

முன்னாள் போராளி கைது!

சட்டவிரோத ஆயுதங்களை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவர் வாழைச்சேனைப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, குளத்துமடுவைச் சேர்ந்தவரான கண்ணமுத்து யோகராசா வயது (48 ) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். வாழைச்சேனை பொலிஸ் நிலையப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்படி நபர் அதே இடத்தில் உள்ள யானைவழங்கி எனும் வயல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் கைக்குண்டு ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் சில ஆயுதங்களை தான் மறைத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.