பக்கங்கள்

19 ஜூன் 2014

தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடப்போவதாக லண்டனில் முஸ்லீம் மக்கள் தெரிவிப்பு!

இலங்கையில் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்தர்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, அதனைக் கண்டித்து நேற்று லண்டனில் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆண்களும், பெண்களுமாக ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் பிரிட்டனின் பல பாகங்களில் இருந்தும் வந்து அதில் கலந்து கொண்டனர். பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.மகிந்த அரசுக்கு எதிராகவும் மற்றும் கோத்தபாய,பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.தமிழர்களும் முஸ்லீம்களும் பிரிந்திருந்தது போதும் என்றும் இனி தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து போராடப்போவதாகவும் அங்கு கருத்துரைத்த ஒருவர் தெரிவித்தார்.மேலும் கருத்துரைத்த அவர்,எமக்கு ஒரு தீர்வு இன்றேல் ஜெனீவாவரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.