பக்கங்கள்

12 ஜூன் 2014

பளையில் குழுமோதல் கத்திக்குத்து!

பளைப்பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமான முறையில் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார்.இதேவேளை மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்றுக் காலை 6.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் திடீரென கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்படி கைகலப்பு இறுதியில் கத்திக்குத்தில் முடிவடைந்ததோடு இந்தக் கத்திக்குத்துக்கு பணக்கொடுக்கல் வாங்கலே காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேற்படி கத்திக்குத்தில் பலியான பளை தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த முத்தையா திலீபன் (வயது 27) என்ற இளம்குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவருக்கு மூன்று வயதேயான குழந்தையயான்றும் உள்ளது. வட்டக்கச்சியை சொந்த இடமாகச் கொண்ட மேற்படி குடும்பஸ்தர் தம்பகாமத்தில் திருமணம் செய்து கொண்டவர் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. மேற்படிச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ள பளை பொலிஸார் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இருவரைக் கைது செய்துள்ளனர். இதேவேளை மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.