பக்கங்கள்

15 ஜூன் 2014

சுதுமலை கொலை தொடர்பில் ஐவர் கைது!

யாழ். சுதுமலை பகுதியில் வயோதிபப்பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஐவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளை குழு வீட்டில் இருந்த இரண்டு பெண்களின் கைகள் மற்றும் வாய் என்பவற்றை கட்டிவிட்டு அவர்களின் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர். வாய் இறுக கட்டப்பட்டதால் வீட்டின் உரிமையாளரான குமாரலிங்கம் பத்மாவதி (வயது- 57) என்பவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன்போது வீட்டில் இருந்த மற்றைய பெண்ணின் மகன் உட்பட ஐவரை சந்தேகத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மற்றையவர்கள் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.