பக்கங்கள்

27 ஜூன் 2014

இயக்கச்சியை சேர்ந்தவர் மருத்துவமனையில் சடலமாக ஒப்படைப்பு!

மயக்கமுற்ற நிலையில் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டவேளை இடைவழியில் உயிரிழந்தார். பின்னர் இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் இயக்கச்சி கோவில்வயலைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான பொன்னையா நவரத்தினம் (வயது - 56) என்பவரது சடலமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன் வேட்டைக்கு சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் இன்று முற்பகல் சங்கத்தாவயல் சுடலையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார் என்றும், வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றபோது அவரது உடல் சோர்வடைந்ததால் பளை மருத்துவமனைக்கு தாம் கொண்டு சென்றனர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இடைவழியில் உயிரிழந்துவிட்டார் என்றும் உறவினர் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.