பக்கங்கள்

16 ஜூன் 2014

சித்தங்கேணி நபர் கொடூரமான முறையில் தற்கொலை!

மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று காலை தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து தற்கொலை செய்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வவிகரன் (வயது 37) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.அம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்றுக்காலை வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார்.வீட்டார் தடுக்கவே அதனை உதாசீனம் செய்துவிட்டு,தான் அருகில் உள்ள கடைக்குச் சென்று வருகிறேன் எனத் தெரிவித்து விட்டு சைக்கிளில் சென்றுள்ளார். காலை 7 மணியளவில் மூளாய் மூன்கோட்டைப் பகுதியில் உள்ள ஒழுங்கையில் நின்ற இவர் தனது கழுத்தை பிளேட்டால் தானே அறுத்துள்ளார். சற்றுத் தொலைவில் நின்ற சிலர் தடுக்க விரைந்த போதும் அவர் தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து மரணமானார். அவரது கை இரத்தம் தோய்ந்த நிலையில் பிளேட்டுடன் காணப்பட்டது. இவர் அங்குள்ள கடை ஒன்றில் காலை பிளேட் வாங்கினார் என வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.பிரேத பரிசோதனைக்காக சடலம் பேதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.