பக்கங்கள்

03 ஜூன் 2014

விசாரணைக் குழுவின் தலைவி நவிபிள்ளை அம்மையார்!

சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணையின் தலைமைப் பொறுப்பை முன்னாள் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் கோபி அற்றா அனான் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கொபி அனான் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளராக இருந்தவர். ஆனால் இந்த விசாரணையின் அறிக்கை, அவருக்கு கீழ் பணியாற்றிய மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும். எனவே இதனை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த விசாரணைக்கான தலைமையை, தற்போதையை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே ஏற்றுக் கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இன்னும் ஓரிரு மாதங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஏற்கனவே சிறிலங்காவுக்கு எதிராக விசாரணை நடத்தி இருந்த மர்சூகி தருமான் அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இந்த நிலையில் நவநீதம்பிள்ளையே சிறிலங்காவுக்கு எதிரன விசாரணை குழுவுக்கு தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.