பக்கங்கள்

30 நவம்பர் 2013

பொலிசார் தாக்கவில்லையென்பது பொய்-வணபிதா

யாழ்ப்பாணத்துக்கு கமரூன் சென்றிருந்தபோது யாழ்.பொதுநூலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற் போனோரின் உறவினர்களையும், அருட்தந்தையர்களையும் பொலிஸார் தாக்கியது உண்மையே.அதனை அவர்கள் மறுக்க முடியாது. இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான அருட்தந்தை யூட் நிக்ஸ்ன் அடிகள் நேற்று தெரிவித்தார். பிரிட்டன் பிரதமரின் வருகையின் போது பொது நூலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போ போது தாக்குதலுக்கு இலக்கான அருட்தந்தை யூட். நின்ஸ்னிடம் கேட்ட ராட்டத்தில் ஈடுபட்ட காணாமற்போனோரின் உறவினர்களையோ, அருட்தந்தையர்களையோ தாம் தாக்கவே இல்லை என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிவ்றி தெரிவித்தார். இது குறித்த சம்பவத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட மக்களையும் அருட்தந்தையர்களையும் பொலிஸார் தாக்கியது உண்மை என்றும் உறுதியாகத் தெரிவித்தார். எனினும் போராட்டம் நடத்தியவர்கள் மீதோ, அருட்தந்தையர்கள் மீதோ பொலிஸார் தாக்குதல் நடத்தவே இல்லை. அங்கு நின்ற பொலிஸார் கைத்தடியைக் கூட கையில் வைத்திருக்கவில்லை. அங்கு தவறி விழுந்த பெண்ணொருவரை பொலிஸாரே தூக்கி விட்டிருந்தனர் - என இது குறித்து நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.