பக்கங்கள்

22 நவம்பர் 2013

மாவீரர் தினத்தால் கதிகலங்கும் அரசபடைகள்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை நினைவூட்டும் பிரசுரங்கள் சிலவற்றை இராணுவப் புலனாய்வுப்பிரிவு இன்று வீசிச்சென்றுள்ளது. இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றில் சென்றிருந்த குழு ஒன்றே குறித்த துண்டுப் பிரசுரங்களை உள்ளே வீசிச் சென்றதாக பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நிர்வாகத்திற்கு அறியத்தந்துள்ளனர். மாணவர்களிடையே குழப்பத்தை தோற்றுவிக்கும் சதி முயற்சியாக இது இருக்கலாமென பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இத்தகைய துண்டுபிரசுரங்களை வீசி வேவு பார்க்கப்படலாமென தாம் நம்புவதாக ஆசிரியர்சங்க வட்டாரங்களும் தெரிவித்தன. ஏற்கனவே இலங்கை முழுவதும் பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு தற்போது அவை திறக்கப்பட்டும் விட்டது. எனினும் மாவீரர் தின அச்சங்காரணமாக யாழ்.பல்கலைக்கழகமோ எதிர்வரும் டிசெம்பர் இரண்டாம் திகதி வரை இழுத்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.