பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் எக்ஸ்போ பிற் ஹோட்டலில் தங்கியுள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை இன்று முதல் மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் மற்றும் நகரங்களை அண்டிய பகுதிகளிலிருந்தும் கிராமங்களின் சில இடங்களில் இருந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த காவலரண்கள் உருமறைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் சில காவலரண்களை தற்காலிகமாக அகற்றியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.