பக்கங்கள்

15 நவம்பர் 2013

தொடரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள்!

வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் இன்று தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி நான்காவது நாளாகவும் உண்ணாவிரப் போராட்டதை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வாசலில் மேற்க் கொண்டார்கள். யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெயர்ந்து தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கி வாழும் மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மக்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,இரா சம்பந்தன்,சுரேஸ் பிறேமச்சந்திரன்,சிவசக்தி ஆனந்தன்,ஈ.சரவணபவான்,செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் எம் .கே.சிவாஜிலிங்கம் பா.கஜதீபன் க.சாவேஸ்வரன்,க.பரம்சோதி,கனகரெட்னம் விந்தன்,கே.சயந்தன் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். இத்துடன் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். வழமை போன்று இன்றும் உண்ணாவிரதம் இடம் பெற்ற சுற்றாடலில் பொலிசாரும் புலனாய்வாளர்களும் அதிக அளவில் காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.