பக்கங்கள்

02 நவம்பர் 2013

சோகமயமானது வடக்கு!

இறுதி யுத்தம் நடந்த வடபகுதியில் தீபாவளி தினம் சோக முகத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களின் முன்னர் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இசைப்பிரியா தொடர்பான வீடியோ வடக்கு மக்கள் மத்தியில் தீபாவளி தினமான இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் பலரும் குறித்த வீடியோக் காட்சியை கண்டு கதி கலங்கிப் போயுள்ளனர். வடக்கில் பட்டாசு கொளுத்தும் வெடிச்சத்தங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புதிய ஆடை வாங்க முண்டியடிக்கும் மக்களை வடக்கு நகரங்களில் காணவும் கிடைக்கவில்லை. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் திரைப்படங்களில் நடித்தவருமான இசைப்பிரியா வன்னி மக்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட வீடியோ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் காணாமல் போனவர்களின் வீடுகளில் அழுகையும் சோகமும் அதிகரித்துள்ளது. இறுதி யுத்தகளத்தில் தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்று அவர்கள் கொந்தளிக்கின்றனர். இன்றைய நாள் காணாமல் போன தமது பிள்ளைகளின் நினைவுகளை கிளறியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.