சாட்டிக் கடலில் தண்ணீருக்குக் கீழால் நீந்திச் சென்று பெண்களுடன்
சேஷ்டை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் தலா 2 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் அவர்களை எச்சரித்து விடுதலை செய்தது .
இந்த விடயம் குறித்துத் தெரியவந்துள்ளதாவது :
சனிக்கிழமை சாட்டிக் கடலில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சமயம் தண்ணீருக்குக் கீழால் நீந்திச்சென்ற 3 இளைஞர்கள் அவர்களுடன் சேஷ்டை புரிந்துள்ளனர் .
இவ்விடயம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் 3 பேரைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்திருந்தினர் .
இது தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இடம்பெற்றது .
விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி 3 பேருக்கும் தலா 2 ஆயிரத்தி 500 ரூபா வீதம் அபராதம் வழங்கியதுடன் அவர்களை எச்சரித்து விடுதலைசெய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.