பக்கங்கள்

23 நவம்பர் 2013

அனந்தி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும், வட மாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். காணாமல் போனவர்களது குடும்பத்திற்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி யாழ்ப்பாணத்தில் அண்மையில் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த நாள் முதல், பாதுகாப்பு தரப்பினர் தம்மை பின்தொடர்வதாக அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தமக்கும் தமது பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வீடு தாக்குதலுக்கு உள்ளான போதிலும் இதுவரையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.