பக்கங்கள்

28 நவம்பர் 2013

யாழில் படை முகாமிலும் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது!

கைதடி சந்தியில் அமைந்துள்ள சிங்களப் படையினரின் மினிமுகாம் காவலரணில் நேற்று மாலை மாவீரர் தின ஈகைச்சுடரேற்றிய குற்றச்சாட்டில் அப்பகுதி வர்த்தகர்கள் சிலர் இன்று காலை விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு படையினர் ரோந்துக்கு சென்றிருந்த நிலையில் அம்மினி முகாம் காலரணுள் புகுந்த சிலரே அங்கு சுடரேற்றி விட்டு சென்றுள்ளனர். ரோந்து சென்று திரும்பிய படையினர் அங்கு வீதியினால் பயணித்த பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்நிலையிலேயே இன்று காலை சில வர்த்தகர்கள் படைமுகாமிற்கு விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.