பக்கங்கள்

09 நவம்பர் 2013

யாழ்,பல்கலைக்கு விடுமுறை அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட் கிழமையிலிருந்து டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு சகல பல்கலைக்கழகங்களுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அதிகநாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பீடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கான காரணம் வெளிப்படுத்ததாத போதும் இந்த விடுமுறைக் காலத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் எவரும் பிரவேசிக்கக் கூடாது; என்ற அறிவுறுத்தலும் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.