பக்கங்கள்

21 செப்டம்பர் 2013

தீவகத்தில் மோசடிகள் இடம்பெறலாமென அச்சம்!

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பினால், இலங்கையின் வட புலத்தில் நடத்தப்படும் வட மாகாணசபைத் தேர்தல், உத்தியோகபூர்வமாக உள்ளுர் நேரம் 4 மணிக்கு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் 50% - கிளிநொச்சி 60ம% - வவுனியா 61% - முல்லைத்தீவு 73% - மன்னார் 70% ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு பதிவாகியுள்ளது. இரு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட 38 ஆசனங்களுக்கான இந்தத் தேர்தலில், வாக்களிக்க 719, 356 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ் மாவாட்டத்தின் தீவகபகுதிகளின் வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் வேளையில் மோசடிகள் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இவ்விவகாரத்தை குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.