நேற்று இரவு நாரந்தனையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர் காடையர்கள்.இது தொடர்பில் காவலூர் பொலிசார் நடவடிக்கை எடுக்க பின்னடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபு என்றழைக்கப்படும் பிரபாகரன் மற்றும் ஆதீஸ் ஆகிய இரு காடையர்கள் 26வயதுடைய குடும்பஸ்தரான ஜேசுதாசன் றொபின்சன் என்ற இளைஞரை அடித்துக் கொன்றதுடன் உடலை கிணற்றுக் கயிற்றில் தொங்கவிட்டு சென்றுள்ளனர்.இந்த இரண்டு காடைகளும் அப்பகுதியில் பெரும் அட்டகாசம் செய்து வருவதாகவும் இவர்களுக்கு எதிரான பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த இரண்டு நபர்களும் ஈ.பி.டி.பியில் முன்னர் இருந்தவர்கள் என்றும் தெரியவருகின்றது.தற்போதும் இவர்கள் மணல் கடத்தல் ஒப்பந்த வேலைகள் எனவும் செய்து வருகிறார்களாம்.றொபின்சன் கொல்லப்பட்டமை தொடர்பில் காவலூர் பொலிசார் அசமந்தமாக இருப்பதால் சட்டவாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்த கொலை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருதல் வேண்டுமென நாரந்தனை மற்றும் அயல்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
பிரபு என்றழைக்கப்படும் பிரபாகரன் மற்றும் ஆதீஸ் ஆகிய இரு காடையர்கள் 26வயதுடைய குடும்பஸ்தரான ஜேசுதாசன் றொபின்சன் என்ற இளைஞரை அடித்துக் கொன்றதுடன் உடலை கிணற்றுக் கயிற்றில் தொங்கவிட்டு சென்றுள்ளனர்.இந்த இரண்டு காடைகளும் அப்பகுதியில் பெரும் அட்டகாசம் செய்து வருவதாகவும் இவர்களுக்கு எதிரான பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த இரண்டு நபர்களும் ஈ.பி.டி.பியில் முன்னர் இருந்தவர்கள் என்றும் தெரியவருகின்றது.தற்போதும் இவர்கள் மணல் கடத்தல் ஒப்பந்த வேலைகள் எனவும் செய்து வருகிறார்களாம்.றொபின்சன் கொல்லப்பட்டமை தொடர்பில் காவலூர் பொலிசார் அசமந்தமாக இருப்பதால் சட்டவாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்த கொலை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருதல் வேண்டுமென நாரந்தனை மற்றும் அயல்கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.