பக்கங்கள்

24 செப்டம்பர் 2013

புளியங்கூடலில் ஈ.பி.டி.பியினர் வெறியாட்டம்!

நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் படுதோல்வி கண்டதால் ஈ.பி.டி.பியினர் கண்டபடி மக்களை தாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பல்லாண்டுகளாக தீவகத்தை தமது அடக்குமுறைக்குள் வைத்திருந்த இவர்கள் இந்த தேர்தலிலும் தாம் வெற்றி பெற்று விடலாம் என்றே கனவு கண்டிருந்தனர்.இவர்களின் கனவை தவிடு பொடியாக்கி "நாம் தன்மானத்தமிழர்"என்பதை தீவக மக்களும் முரசறைந்து இன்று நிமிர்ந்து நிற்கின்றனர்.மக்களின் எழுச்சி கண்டு கொதித்துப்போன ஈ.பி.டி.பியினர் புளியங்கூடல் பகுதியிலும் தமது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.இளைஞர்களை தேடித்தேடித் தாக்கியதுடன்,முன்னர் ஈ.பி.டி.பியினருக்கு ஆதரவாக இருந்த சில இளைஞர்களும் இத்தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பதாக கூறி அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.