பக்கங்கள்

22 செப்டம்பர் 2013

யாழ் பல்கலைக்கழகத்தில் பதற்றம் : இராணுவம் சுற்றிவளைத்தது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணசபைத்தேர்தல் வாக்களிப்பில் இதுவரையிலும் வெளியான பெறுபேறுகளின் பிரகாரம் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னணியில் நிற்கின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக பட்டாசு கொளுத்தியதையடுத்தே ஆயுதம் தரித்தவர்கள் பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிர்வின் செய்தியாளர் சற்று முன் அறியத்தந்துள்ளார் ! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(மகிந்தர் கட்சி) யாழில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் வெடிகொழுத்தியுள்ளார்கள். இதனை சற்றும் பொறுக்க முடியாத இராணுவத்தினரும் ஈ.பி.டி.பி கைக்கூலிகளும் இணைந்து மாணவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளார்கள். டக்ளஸ் மாமா மண் கவ்விய நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் யோசிப்பது மட்டுமல்ல, மகிந்தருக்கு என்ன பதில் கூறுவது என்று திணறியடித்துக்கொண்டு இருப்பார் என்றும் யாழில் உள்ள சில வேட்ப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.