பக்கங்கள்

23 செப்டம்பர் 2013

முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு!

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுமாலை 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவுசெய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரு.சிவி.விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவுசெய்தார்கள். இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சி.வி விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர்கள் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு போனஸ் ஆசனங்களுக்காக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் நாளையதினம் வட மாகாண முதலமைச்சராக சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதுடன், தமிழரசுக் கட்சியின் யாழ் தலைமையகத்தில் நான்கு வட மாகாண அமைச்சர்களும் போனஸ் ஆசனங்களுக்கு உரிய இரண்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.