பக்கங்கள்

20 செப்டம்பர் 2013

அனந்தி சசிதரனுக்கு எதிராக உள்ளக வெளியக சதி!

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும், திருகோணமலை மாவட்ட முன்னால் அரசியல் துறைப் பொறுப்பாளரும், தமிழீழ பரப்புரை செயலகப் பொறுப்பாளருமான திரு.எழிலனின் துணைவியார் திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள் இன்றுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது அதிக பற்றும் வைத்திருப்பதோடு, தமிழ்த் தேசியத்தினை முன்னிறுத்தி செயற்படுத்தி வருபவர். எமது தாயகம் சிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று நேற்றைய தினம் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு மிக துணிச்சலோடு ஒரு நேர்காணலையும் கொடுத்திருந்தார். அத்துடன், தான் எழிலனின் மனைவியா இந்த தேர்தலில் நிற்கவில்லை. மாறாக, பலத்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் காணமல் போனவர்களின் அடையாளமாக தேர்தலில் குதித்துள்ளேன் எனத் கூறியுள்ளர். இவர் வெற்றி பெறுவது மட்டுமில்லை. இவரால், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்கு வங்கி அதிகரிக்கும். இதனால், அச்சங்கொண்ட சிறீலங்கா தரப்பு, அனந்தி சசிதரன் அவர்கள் தேர்தலில் விலகிவிட்டதாக பொய்ப்பிரச்சாரம் ஒன்றை இன்று காலை முதல் கிளப்பிவிட்டுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் வட மாகாண சபைத்தேர்தலுக்கான சிறப்பு நிருபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் திரு.சி.வி.விக்னேஸ்வரனையும் விட அதிகமான வாக்குகள் அனந்திக்கே விழும் என்ற அச்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளோருக்கும் மத்தியில் உள்ளதால், அனந்தி அவர்களுக்கான விருப்பு வாக்கில் சதித்திட்டம் மூலம் மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அறிய முடிகிறது. அனந்தி சசிதரனுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் தமிழிழ விடுதலைப் போராட்டத்திற்கான மீள் அங்கீகாரம் என யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் ஆய்வாளர் ஒருவர் பரிஸ்தமிழ்.கொம்மின் வட மாகாண சபைத் தேர்தலுக்கான சிறப்பு நிருபரிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி:பரிஸ்.கொம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.