பக்கங்கள்

26 செப்டம்பர் 2013

யாழ்,பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு நாள் அனுஷ்டிப்பு!

தமிழீழத் தயாக விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் முற்பகல் 10.48 மணிக்கு திலீபன் சாவைத் தழுவிக் கொண்ட நேரத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி உள்ளதுடன் நினைவு பேருரைகளையும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பல்கலைக்கழகத்தின் உள்பகுதி எங்கும் திலீபனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.