பக்கங்கள்

03 செப்டம்பர் 2013

ஈழத்தமிழர்கள் நாடு கடத்தப்படமாட்டார்கள்-சுவிஸ்

இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிடம் கோரி சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்துள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிட்சர்லாந்து குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2011ம் ஆண்டு முதல்இதுவரையில் 24 இலங்கையர்கள் பலவந்தமான அடிப்படையில் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் 129 பேர் தன்னார்வ அடிப்படையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.