பக்கங்கள்

21 செப்டம்பர் 2013

யாழில் படைகளின் விஷமப்பிரச்சாரம்!

கூட்டமைப்பின் சார்பில் யாழில் பேட்டியிடும் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். இன்று காலை அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னைநாள் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலனின்  துணைவியார் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு உள்ளது. எனினும் அனந்தி அரசாங்கத்துடன் தான் இணையவில்லை எனவும் இது அரசாங்கத்தினதும் அவர்களின் படையினரதும் திட்டமிட்ட போக்கிலித் தனம் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.