பக்கங்கள்

21 செப்டம்பர் 2013

மாதகலில் வாக்களிக்க விடாது மக்கள் படைகளால் தடுப்பு!

வலி. வடக்கு மாதகல் பிரதேசத்தில் வாக்களிக்க சென்ற மக்களை இராணுவ புலனாய்வாளர்கள் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்து விட்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கில் இதுவரை நடைபெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் 95 வீதமானவை இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று கூட இராணுவத்தினர் வாக்களிக்க சென்ற மக்களை வாக்களிக்க செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை அச்சுறுத்தி உள்ளார்கள். இது தொடர்பகாக நாம் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளோம். நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை ஈ.பி.டி.பி.யும் இராணுவத்தினரும் சேர்ந்து யாழில் பல பகுதிகளில் மக்களிடம் விநியோகித்து உள்ளார்கள். இன்று காலை கூட ஒரு பத்திரிக்கையின் பெயரில் அதேபோலான அநாமதேய பத்திரிகை ஒன்றை வெளியிட்டு தமிழரசு கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கின்றது என செய்தி வெளியிட்டு மக்களை குழப்பி உள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.