பக்கங்கள்

23 செப்டம்பர் 2013

தா.பாண்டியன் வாழ்த்து!

தமிழர் தேசியக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையின் வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச பிரதிநிதிகளின் மேற்பார்வையில் நடைபெற்ற தேர்தலில் ஈழத் தமிழர்கள் மிகத் தெளிவான, திட்டவட்டமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களையும், கொடிய இன அழிப்புப் போருக்குப் பிறகு அஞ்சாமல் வாக்களித்த மக்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். துப்பாக்கி முனையில் ஒடுக்குமுறைகள் நீடிக்கும் சூழலில், ஈழத் தமிழர்கள் தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையில் வாக்களித்திருப்பதை, இந்திய அரசும், இலங்கை அரசும் உணர வேண்டும்.மக்களின் இந்த்த தீர்ப்பை மதித்து ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தா. பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.