பக்கங்கள்

15 செப்டம்பர் 2013

காரைநகரில் படைகளால் தடுக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!

சிவாஜிலிங்கம் 
தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் காரைநகரில் இரு மணி நேரம் சிங்களப்படைகளால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காகக் காரைநகருக்கு நேற்று மாலை சென்றுள்ளார். இதன்போது காரைநகர் வலந்தலைச் சந்தியில் அவரது வாகனத்தை மறித்த சிங்கள படைகள், சுவரொட்டிகளை ஒட்டுவதாகக் குற்றம் சாட்டி அவரை தடுத்து வைத்திருந்தனர் சுமார் இரண்டு மணி நேரம் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கம் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.