பக்கங்கள்

18 செப்டம்பர் 2013

நாங்கள் வலிகளை சுமந்தவர்கள்-அனந்தி எழிலன்(காணொளி)

சரணடைந்தவர்களையும் தடுத்து வைக்கப்பட்டவர்களையும் மீட்பதற்காகவும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் எமது சுயகௌரவத்தை பாதுகாப்பதற்கும் இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி எழிலன் சாவகச்சேரியில் நேற்று முந்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் சாட்சியமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் மூடிமறைத்து வடமாகாணசபை தேர்தலில் வெல்லவேண்டும் என்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. நாம் எல்லோரும் வலிகளை சுமந்தவர்கள் இந்த சலுகைகளினால் எம்மை வாங்க முடியாது என்பதை இத்தேர்தலில் நிருபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.