பக்கங்கள்

29 செப்டம்பர் 2013

மாகாண சபையின் அமைச்சுப்பதவி குறித்து இன்று முடிவு!

வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும்,போனஸ் ஆசனம் தொடர்பிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் எனத்
தெரியவருகின்றது.வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் போனஸாகக் கிடைத்தன. இதில் ஒரு ஆசனத்தை மன்னாரில் முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஒரு ஆசனத்தை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோன்று மாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. முக்கிய இரு முடிவுகளையும் எடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடவுள்ளனர். நாளை திங்கட்கிழமைக்கு முன்னர், போனஸ் ஆசனங்களுக்கு உரியவர்களின் பெயர்களை அனுப்புமாறு தேர்தல்கள் ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.