பக்கங்கள்

30 செப்டம்பர் 2013

காணொளி வைத்திருந்த இளைஞர் கைது!

மட்டக்களப்பு, கல்குடாப் காவற்துறை பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.09.12) மாலை இந்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். காவற்துறையினரைக் கண்டு ஓடிய இளைஞனை பிடித்த காவற்துறையினர் கையடக்கத் தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர். இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேத்தாளை விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இந்த இளைஞனிடம் கல்குடா காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.