பக்கங்கள்

27 செப்டம்பர் 2013

வாகரையில் படையணி ஒன்று தரை இறக்கம்?

தென் தமிழீழத்தின் வாகரை பிரதேசத்தில் ரொக்கட் லோஞ்சர் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மீடகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார். நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 40 மில்லி மீற்றர் ரக ரொக்கட் லோஞ்சர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். இந்த ரொக்கட் லோஞ்சர் அண்மைக் காலத்திலேயே புதைக்கப்பட்டுள்ளது போல் தெரியவருகறது. வாகரை கோமந்தமடு களப்பு வீதியில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் பற்றைக் காட்டை வெட்டி துப்பரவு செய்யும் பணியில் வீட்டின் உரிமையாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று குண்டை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, அண்மையில் மட்டக்கப்புக்கு அண்மித்த கடற்பகுதியில் அனாதரவான நிலையில் இயந்திரங்கள் பூட்டப்பட்ட படகொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஆயுததாரிகள் சிலர் வந்து தரையிறங்கியதாகவும் குறித்த செய்திகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையிலேயே, இந்த ரொக்கட் லோஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, தரையிறங்கிய விசேட படையணி ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் நடாத்த திட்டம் தீட்யிருப்பதாக செய்திகள் அடிபடுகிறது.இவ்வாறு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.