பக்கங்கள்

09 மே 2013

சிறுவன் உயிரையும் பறித்தான் யமன்!

விடுமுறைக்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் திரும்பிச் செல்ல இருந்தனர். கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் மஞ்சள் கோட்டில் வீதியை கடக்கும் வேளையில் கார் ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகினர். ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜவீனின் மகன் ஜனன் ( 13 வயது) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16 வயது) , ஜவீனின் சகோதரியின் மகள் பாலசூரியன் வாரணி (29 வயது) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இக்கோர விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.