பக்கங்கள்

02 மே 2013

அசாத் சாலி கைது!

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் துணை மேயர் அசாத் சாலி அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலன்னாவையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் குற்றப் புலனாய்வினரால் கைது செய்யப்பட்டதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இவருக்கு எதிராக சில முறைப்பாடுகள் வந்திருந்ததாகவும், அது குறித்து விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் வராத காரணத்தால் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பு பேச்சாளரான புத்திக சிறிவர்த்தன தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.