பக்கங்கள்

12 மே 2013

தேசியத் தலைவரின் பாடசாலை நண்பர் குற்றத்தை ஒப்புக்கொண்டாராம்!

அயர்லாந்துக் குடியுரிமை பெற்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பாடசாலைத் தோழர் எனக்கூறப்படுபவர் தீவிரவாதச் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டதை நேற்று சிறிலங்கா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஞானசுந்தரம் ஜெயசுந்தரம் என்ற, தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பாடசாலைத் தோழர், 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவர், விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதில் முக்கியமானவராக விளங்கினார் என்றும், விடுதலைப் புலிகளின் அனைத்துலக புலனாய்வுப் பிரிவில் செயற்பட்டார் என்றும், குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து இராணுவ தளபாடங்களைக் கொண்டு செல்வதற்காக கப்பல் ஒன்றை வாங்கியதாக நீதிமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர், தன்னைப் புனர்வாழ்வுக்கு அனுப்புமாறும், சமூகத்தில் நல்ல குடிமகனாக தன்னால் இணைந்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். 2007இல் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஞானசுந்தரம் ஜெயசுந்தரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.