பக்கங்கள்

12 மே 2013

இலங்கையில் அரசியல் சூழ்நிலை ஆபத்தானது!

ஹிருனிகா 
அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருங்கு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும், முழு அளவில் அரசியலில் ஈடுபடுவதற்கு போதியளவு ஆதரவு தேவைப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியதுடன், இலங்கையில் அரசியல் செய்வது மிகவும் கடினமானது எனவே குடும்பத்தாருடன் இணைந்து பேசி அரசியலில் ஈடுபடுவது குறித்து இறுதித் தீமானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொலன்னாவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக மீண்டும் துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.