பக்கங்கள்

10 மே 2013

இளம் வர்த்தகர் நஞ்சருந்தி சாவு!

யாழ்.நகரில் இளம் வர்த்தகர் ஒருவர் நஞ்சருந்தி நேற்று வியாழக்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் நல்லூர் சங்கிலியன் வீதி, பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வர்த்தகரான சந்தானம் சசிக்குமார் (வயது23) என்பவரே பலரிடம் கடன் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட உளத் தாக்கத்தினாலேயே அவர் நஞ்சை உட்கொண்டு சாவைத் தழுவினார் என்று தெரிய வந்தது என்று யாழ். போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி என்.பிரேம்குமார் தெரிவித்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.