பக்கங்கள்

11 மே 2013

விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ள இந்திய அரசு!

இந்தியாவிலிருந்து ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இலங்கையின் வடபகுதிக்கு இந்தியப் புலனாய்வாளர்கள் அனுப்படுகின்ற விடயங்கள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை வரும் இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து இந்திய அரசிற்கான ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சிகின்றனர். சர்வதேச அரசியலை நோக்கி நகரும் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் இந்திய அரசின் ஒரு இரகசிய நடவடிக்கையாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்மை ஊடகவியலாளர்கள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தும் இவர்கள், விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை 1987 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்றுவரை அழிக்கும் செயற்பாடுகளையே இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தி ஜீவிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.