பக்கங்கள்

14 மே 2013

சவால் விடுகிறார் சிறிலங்கா படைகளின் வன்னித்தளபதி!

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், வன்னி மாவட்டத்தில் பொதுமக்களில் ஒருவர் கூடக் காணாமற் போகவில்லை என்று, வன்னிப் படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர், யாராவது காணாமற்போயுள்ளனர் என்று கூறும் எவரேனும், காணாமற்போனவர்கள் யார், எப்போது, எங்கே என்ற விபரங்களைத் தர முடியுமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக தாம் எந்தவொரு தனிநபருடனோ அல்லது அனைத்துலக அமைப்புடனோ, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “வன்னியில் போர் முடிவுக்கு வந்த பின்னர், எவரும் காணாமற்போகவோ கடத்தப்படவோ இல்லை. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. போரினால் வன்னி மாவட்டத்தில் மூவினத்தவர்களும் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் தமிழர்களை மீளக்குடியேற்றவே நாம் முன்னுரிமை கொடுத்தோம். அதன் பின்னர் தான் சிங்களவர்களை மீளக்குடியேற்றி வருகின்றோம். ஆனாலும், ஊடகங்கள் உண்மைக்கு மாறாக செய்திகளை வெளியிடுகின்றன” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.