பக்கங்கள்

01 மே 2013

நெடுந்தீவு கடலில் கைதான மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதவான் ஆர். எஸ்.எம். மகேந்திரராஜா எதிர்வரும் 6ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கடந்த வாரம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் மேலும் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஆர். சபேசன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.