பக்கங்கள்

08 மே 2013

யாழில் டக்ளஸ் – கே.பி பிரச்சார மோதல்!

குமரன் பத்மநாதன் 
வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். இவர் வந்த வேகத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்துள்ளதோடு தனது துரோகத் தனங்களை தொடர்ந்து அரங்கேற்றுவதற்கான அடித்தளங்களை யாழ்ப்பாணத்தில் அமைத்து வருகின்றார். ஊடகங்களின் குரல்வளையை அமைச்சர் டக்ளஸ் நெரிப்பேன் என்று தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்ட கே.பி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்த நிலைப்பாட்டையும் தான் எடுக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை இப்பொழுதே வடக்கு தேர்தலில் அரசாங்க தரப்புக்கள் தமக்குள்ளே உள்ள போட்டி காரணமாக ஒருவரை ஒருவர்
 விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.