பக்கங்கள்

11 மே 2013

மே 18 சர்வதேச இனப்படுகொலை நாள்!

முள்ளிவாய்க்கால் 
2009ம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை தமிழீழத்தில் சாட்சிகளே இல்லாமல் அரங்கேறியது. இந்தியாவின் ஒப்புதலோடு உலக நாடுகள் வேடிக்கை பார்க்க இந்த தமிழ் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியது. இந்த இனப் படுகொலையை தொடர்ந்து தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே அகதிகளாக கைதிகளாக மாற்றப்பட்டனர் தமிழர்கள். இது ஒரு இன அழிப்பாகவே பார்க்க முடிகிறது. எனினும் ஐ.நா மன்றமோ, உலக நாடுகளோ இந்த இன அழிப்பை ஏற்கவில்லை. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என அங்கீகரிக்கவில்லை. தமிழக அரசு ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை தான் என சொல்லிய பிறகும் இந்திய அரசு அதை ஏற்கவில்லை. இந்நிலையில் 2009 மே 18ம் நாளில் மாபெரும் இனப் படுகொலைக்குப் பின் போரை நிறுத்தியது இலங்கை அரசு. இந்த நாள் தமிழர்களின் கறுப்பு தினமாக உலகத் தமிழர்களால் கருதப்படுகிறது. இந்த நாளை இலங்கை அரசு தமிழர்களை கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது. அதற்கு எதிர்வினையாக தமிழர்கள் இந்த நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அனுசரிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசின் அதிகார பூர்வ ஒப்புதல் வேண்டும். இந்த நாளை தமிழக அரசு உலக தமிழர்களின் கருப்பு நாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு இதை பரிந்துரைக்க வேண்டும் என தமிழகம்- தமிழர் பண்பாட்டு நடுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.