பக்கங்கள்

18 மே 2013

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு!

வவுனியா தமனக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் நினைவாக ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் முள்ளிவாய்க்காலில் உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்று 4 ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இதற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த நினைவுதூபியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே நேற்று இரவு விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.