பக்கங்கள்

25 மே 2013

கருணா கேட்டாராம் அரசு நிராகரித்ததாம்!

கருணா 
கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியவர்கள், இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், கிராமங்களுக்குள் புகுந்து கொலைகளை செய்தவர்கள் என பல வன்முறைச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சுமார் 200 விடுதலைப்புலிகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு மாத்திரம் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.