பக்கங்கள்

01 ஜனவரி 2012

உடுவில் பகுதியில் இளைஞர்களின் தொல்லை அதிகரிப்பு!

உடுவில் பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுவதாக பொதுமக்கள் குறைப்பட்டுக் கொள்கின்றனர். மாலை வேளைகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் வந்து முக்கிய சந்திகளில் கூடும் இளைஞர்கள் வீதியால் போக்குவரத்து செய்யும் மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதுடன் மதுபோதையிலும் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்களால் கிராம அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.இதேவேளை, கிராமங்கள் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுடைய செயற்பாடுகள் முழுமைபெறாத நிலை காணப்படுகிறது. இதனால் இச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.